ஞானகுரு :
நோய் நிச்சயம் உடல் சார்ந்ததுதான். ஆனால், அதனை குணப்படுத்தும் மருத்துவம் மனம் சார்ந்தது. உங்கள் காய்ச்சலுக்கு அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் ஸ்பெஷல் மருந்தை ஊசியில் செலுத்திப் போடுகிறேன் என்று மருத்துவர் சொல்லிவிட்டு, ஒரு சாதாரண மருந்தைப் போட்டாலும், அடுத்த சில மணி நேரங்களிலே உடலில் இருக்கும் நோயில் நல்ல முன்னேற்றம் தென்படும். அதுதான், மனம் செய்யும் மேஜிக். எனவே, எல்லா நோய்களும் நிச்சயம் குணமாககிவிடும் என்ற நம்பிக்கையை மனதில் விதைத்துக்கொள்ளுங்கள். வயது அதிகரிக்கும்போது உறுப்புகளின் செயல் திறன் குறையவே செய்யும். இவற்றை நோயாகப் பார்க்காமல், வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
gyaanaguru.com Changed status to publish March 17, 2025