ஞானகுரு ;
உடல் ஒத்துழைக்க மறுக்கும் வரை மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அதன் பிறகு கிடைப்பது ஓய்வு அல்ல, நோய் படுக்கை. நன்றாக உடல் இருக்கும் நேரத்தில் நன்கு ஓய்வுக்குப் பழகுதல் வேண்டும். உடலுக்கு தூக்கம் எத்தனை அவசியமோ அந்த அளவுக்கு மனசுக்கு ஓய்வு அவசியம். அதனால்தான் ஐந்து நாட்கள் உழைப்பு, இரண்டு நாட்கள் ஓய்வு என்று கட்டமைப்பு உலகெங்கும் நிலவுகிறது.
இந்த ஓய்வு உடலுக்கு அல்ல, மனதுக்கு. அலுவலக வேலை செய்பவர்கள் மட்டுமின்றி வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கும், காட்டு வேலை செய்யும் விவசாயிகளுக்கும் ஓய்வு நிச்சயம் தேவை. அப்போதுதான் உடலும் மனமும் நலம் பெறும். இன்னும் சொல்லப்போனால் ஓய்வுக்கு மத்தியில் வேலை செய்ய வேண்டுமே தவிர, வேலைக்கு மத்தியில் ஓய்வு கூடாது.
gyaanaguru.com Changed status to publish October 21, 2024