ஞானகுரு ;
நிச்சயமாக மரணத்தில் கடைசி நொடி வரையிலும் ஆசைகள் வந்துகொண்டேதான் இருக்கும். வெட்டவெட்ட முளைக்கும் களைகள் போன்றவை இந்த ஆசைகள். . முளைப்பது களைகளின் தன்மை என்றால், அவற்றை உடனடியாக கிள்ளிப்போடுவது உங்களுடைய வேலை. இல்லையென்றால் வெள்ளாமை வீடு வந்து சேராது. எனவே, ஆசை ஆரம்பமாகும் நேரத்திலேயே புத்தரை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அத்தனை செல்வத்தையும் துறந்து அவர் எதை தேடினார் என்று நினைத்துப் பாருங்கள். உங்களால் ஆசையை கிள்ளி எறிய முடியும். உடனடியாக கிள்லவில்லையென்றால் அந்த ஆசை வேர்விட்டு, மரமாகி உங்களையே விழுங்கிவிடும். .
gyaanaguru.com Changed status to publish November 8, 2024