ஞானகுரு :
இந்த மண்ணில் தாங்கள் வாழ்ந்த அடையாளத்தை விட்டுச்செல்ல ஒவ்வொரு மனிதரும் ஆசைப்படுகிறார். அதற்காகவே இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறார், ஏதேதோ புதிய முயற்சி செய்கிறார்கள். ஆனால், இறந்தவர்கள் உடலோடு அவர்களும் நினைவுகளும் சேர்த்தே எரிக்கப்படுகிறது. ஒரு சிலரது ஞாபகம் சில மாதங்கள், சில வருடங்கள் இருக்கலாம் என்றாலும், அதனால் செத்துப்போனவருக்கு எதுவும் ஆகப்போவதில்லை.
அதேநேரம் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என பறவைகளும் விலங்குகளும் வாழ்ந்து கட்டுகின்றன. ஆம், அவை வாழ்ந்த எந்தவொரு தடயத்தையும் விட்டுச் செல்வதில்லை. கற்பூரம் எரிந்து கரைந்து போவதை போன்று வாழ்ந்த தடயமின்றி மனிதர்களும் மறைந்து போக வேண்டும்.
gyaanaguru.com Changed status to publish July 13, 2024