ஞானகுரு ;
உங்களுக்குப் பிடித்த உறவினர், நண்பர் என்றால் எப்படியாவது பேசி உங்கள் வீட்டுக்கு வரவழைத்து விடுவீர்கள். பிடிக்காத ஒரு நபர் என்றால், ஏதாவது காரணம் சொல்லி அவரை தவிர்த்துவிடுவீர்கள். அதேபோல், உங்களுக்குப் பிடித்த பொருள் என்றால் எப்படியாவது பணம் புரட்டி வாங்குகிறீர்கள். பிடிக்காத பொருள் விலை மலிவாகக் கிடைத்தாலும் வாங்குவதில்லை.
ஆகவே, முதலில் பணத்தை உங்களுக்குப் பிடித்த ஒன்றாக நினைக்கவும், மதிக்கவும், வரவழைக்கவும் ஆசைப்பட வேண்டும். பணத்தை மதிப்பது மட்டுமல்ல, சொந்தம் கொண்டாடும் நபர்களையே பணம் தேடி வரும். அதாவது, உங்கள் உழைப்பே பணமாக மாற்றப்பட்டு உங்கள் கையில் வந்து சேரும். கடினமாக மட்டும் உழைத்தால் குறைவான பணமே கிடைக்கும். புத்திசாலித்தனமாக உழைத்தால் அதிக பணத்தை வரவழைக்க முடியும். எத்தனை அதிகம் பணம் வைத்திருக்கிறீர்களோ, அத்தனை அதிகம் உழைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆகவே, பணம் மீது ஆசை வையுங்கள். நம்புங்கள். பணம் உங்களை நோக்கி நிச்சயம் வரும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.