ஞானகுரு :
பற்கள் முளைக்கும் வரையிலும், பற்கள் முழுமையாக விழுந்த பிறகும் திரவ உணவு அதிகமாகவும், திட உணவு மிதமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தந்த பருவத்தில் விளையும் காய், கனிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மற்றபடி அசைவமும் சைவமும் அவரவர் விருப்பம். ஓர் உண்மை தெரியுமா? சைவ உணவு என்று ஒன்று இந்த உலகிலேயே இல்லை. ஏனென்றால் தாவரங்களுக்கும் உயிர் உண்டு. பூச்சியினங்களைத் தின்னும் தாவரங்களும் உண்டு. ஒவ்வொரு கதிரைப் பறிக்கையிலும் செடிக்கு வலிக்கவே செய்யும். மாட்டுப் பாலும் அசைவமே. ஒன்றையொன்று தின்று வாழும் வகையிலே உயிரினங்கள் படைக்கப்பட்டுள்ளன. எனவே, உணவுக்கு மட்டும் கவலைப்பட்டால் போதும், சைவம், அசைவம் என்று குழப்பிக்கொள்ள வேண்டாம்.
gyaanaguru.com Changed status to publish September 22, 2024