ஞானகுரு :
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா அறியாமல் (?) செல்ல முயன்ற நேரத்தில், விதிமீறல் என்று வெளியே நிறுத்தப்பட்டிருக்கிறார். இந்த சனாதன தர்மத்தை இளையராஜா பெருமையுடன் ஏற்றுக்கொள்பவர். அதனாலே, ’என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை..’ என்று கூறி பிரச்னையை முடித்து வைத்திருக்கிறார்.
இளையராஜாவை யாரும் அவமானம் செய்யவில்லை என்று பா.ஜ.க.வினரும், அறநிலையத் துறையினரும், ஆன்மிகவாதிகளும் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்கிறார்கள். இப்படியெல்லாம் சிரமப்பட்டு தன்னிலை விளக்கம் கொடுப்பதற்குப் பதிலாக, இளையராஜாவை ஒரே ஒரு முறை கருவறைக்குள் கூட்டிச் சென்றால் போதும். தீண்டாமை பற்றி யாரும் பேசவே மாட்டார்கள். அப்படி, இளையராஜாவை கூட்டிச்செல்லப் போவது யார்..?