ஞானகுரு :
வணிகம் செய்வதற்கு பெரும் துணிச்சல் தேவை. நிறைய தோல்விகளை சந்திக்க வேண்டியிருக்கும். இரவும் பகலுமாக அதே சிந்தனையில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட துன்பம் தங்களோடு தொலைந்து போகட்டும் என்பதே பெற்றோர் கனவாக இருக்கிறது. குளிர்சாதன அறைக்குள் சொகுசாக அமர்ந்து அடிமை வேலைசெய்து சம்பாதிப்பதை பெருமை என்று இன்றைய தலைமுறை நினைக்கிறார்கள். அதை உண்மை என்று பெற்றோரும் ஏற்கிறார்கள்.
எத்தனை கடுமையாக உழைத்தாலும் மாத சம்பளம் வாங்குபவரால் கோடீஸ்வராக முடியாது என்ற உண்மை புரிந்து வணிகம் செய்ய ஆசைப்படும் நேரம் வரும். ஆனால், அதற்குள் வெள்ளம் தலைக்கு மேல் போயிருக்கும்.
gyaanaguru.com Changed status to publish
