ஞானகுரு :
யாரும் யாரையும் விட மேலோரும் இல்லை, கீழோரும் இல்லை. எனவே யார் காலிலும் விழும் கலாசாரம் மனிதனுக்குத் தேவை இல்லாதது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் கலாச்சாரத்தின் மிச்சசொச்சமே காலில் விழுதலும், விழ வைத்தலும். காலில் விழுந்து காரியம் சாதித்துக்கொள்வதையும் ஒரு கலையாக எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் எல்லா மனிதருக்கும் ஏதேனும் விலை வைக்கிறார்கள். சின்ன வயதிலேயே இதனை போதிப்பது பெற்றோர்களே. கடைக்குப் போய்விட்டு வந்தால் மிச்ச காசை எடுத்துக்கொள் என்பதில் தொடங்குகிறது இந்த காரியம் சாதிக்கும் புத்தி.
gyaanaguru.com Changed status to publish July 5, 2024