ஞானகுரு :
மனிதன் படைப்பில் அதிஉன்னதமானது பணம். கடவுளுக்கு சக்தி இருக்கிறதோ இல்லையோ, பணத்துக்கு நிச்சயம் அதீத சக்தி உண்டு. பணம் என்பது உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியம். ஆகவே, அதனை கொண்டாடுவது தவறில்லை. பணத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவரை அது கேடயமாகப் பாதுகாக்கும்.
அதேநேரம், அப்பா பணம், தாத்தா செல்வத்தில் வாழ்பவர்களும் உழைக்காமல் சம்பாதித்தவர்களும் பணத்தைச் துச்சமாகக் கருதுகிறார்கள். அதனால் பணத் திமிருடன் நடந்துகொள்கிறார்கள். அறியாமை எனும் வியாதியே திமிராக வருகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுக்க விஷம் போன்று பரவி அவரையே விழுங்கிவிடும். ஆகவே, பணத்தை மதித்துக் கொண்டாடுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
gyaanaguru.com Changed status to publish January 1, 2025