ஞானகுரு :
தன் உடலை விற்றுக் கிடைக்கும் பணத்தில் உயிர் வாழவேண்டும் என்ற லட்சியத்துடன் எந்த பெண்ணும் பிறப்பதில்லை, வாழ்வதில்லை. அப்படியொரு இக்கட்டான சூழலுக்கு பெண்ணை மாற்றுவது ஆண். பெண்ணின் உடலுக்குள் இன்பத்தைத் தேடியலையும் ஆண்கள் இருக்கும்வரை, இப்படிப்பட்ட பெண்கள் உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள்.
உங்கள் காமத்துக்கு மட்டுமே வடிகாலாக இருக்கும் மனைவியை கொண்டாடுகிறீர்கள். எத்தனையோ ஆண்களின் காம வெறிக்கும், அகந்தைக்கும், திமிர்த்தனத்துக்கும் வடிகாலாக இருக்கும் பெண்களை மட்டும் இழிவாகப் பார்ப்பீர்களா..? எல்லா அழுக்குகளையும் தாங்கிக்கொண்டு ஓடும் கங்கையைப் போன்றவர் பாலியல் தொழிலாளி.
gyaanaguru.com Changed status to publish October 6, 2024