ஞானகுரு :
மரம் நடுவதன் சிறப்பை சொல்லித்தருவதை விட முக்கியமான சில விஷயங்கள் இருக்கின்றன. அக்கம்பக்கத்தில் உள்ள செடி, கொடி, மரங்களின் பெயர், அதன் தன்மைகள், பயன்களை மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். புல் தரையில் நடப்பதும், சும்மாவேனும் செடியின் இலை, பூக்களை கிள்ளி எறிவதும் தவறான செயல் என்ற புரிதல் இருக்க வேண்டும்.
நிறைய உயிரினங்களுக்குக் காடுகள்தான் இருப்பிடம். கரியமில வாயுவை உள்வாங்கி, உணவு, எரிபொருள், மருந்து போன்ற பலவும் தரும் காடுகளை அழிப்பது தவறு என்பதை அறிதல் வேண்டும். தனி மனிதராகவும் மரங்களின் பயன்பாட்டை குறைக்கும் விருப்பம் வேண்டும். மண்ணுக்கு ஏற்ற தாவரத்தை மட்டுமே பயிரிட வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டால், மாணவரே இயற்கை ஆர்வலராக மாறிவிடுவார்.
gyaanaguru.com Changed status to publish July 8, 2024