ஞானகுரு :
தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது என்று சொல்பவர்கள் தான், எமனிடம் இருந்து கணவன் உயிரை சாவித்ரி மீட்டு வந்தாள் என்கிறார்கள். என்றும் பதினாறு வயதாக மார்க்கண்டேயன் இருக்கிறான் என்றும் சொல்கிறார்கள். பக்தி, தர்மம் மூலம் விதியை வெல்ல முடியும் என்றும் அவர்களே சொல்வார்கள்.
இதில் அறிவியலுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும். அதேநேரம், திறமையை மட்டும் வைத்து ஒருவரது வெற்றியை உறுதி செய்ய முடியாது. ஏனென்றால் ஒருவரது வெற்றிக்கு அவரது திறமை மட்டுமின்றி சுற்றியிருக்கும் மனிதர்கள், சுற்றுச்சூழலுக்கும் முக்கியப் பங்கு உண்டு. இதை சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள். அது உண்மை அல்ல. தன் திறமை மீது நம்பிக்கை வைத்து சரியான வாய்ப்புக்குக் காத்திருப்பவர், அவரது தலைவிதியை அவரே எழுதிக்கொள்ள முடியும்.
மு.க.ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் ஆகும் யோகமே இல்லை என்று அத்தனை ஜோதிடர்களும் அடித்துச் சொன்னார்கள். ஆனாலும், பொறுமையுடன் காத்திருந்து சரியான நேரத்தில் முதல்வராக மாறியிருக்கிறார். தலைவிதியை நம்பாமல் தன்னை நம்புபவரால் எதையும் சாதிக்க முடியும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.