ஞானகுரு :
நீங்கள் செய்யும் வேலையை காதலுடன்தான் செய்கிறீர்களா என்று பரிசோதனை செய்துபாருங்கள். பணத்துக்காகவும், கடமைக்காகவும் வேலை செய்தால் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்காது. வேலை செய்து முடிக்கும்போது உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறது என்றால், அதுவே சிறப்பாக வேலை செய்திருக்கிறீர்கள் என்பதற்கான குறியீடு.
நோபல் பரிசு வாங்கவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் எந்த விஞ்ஞானியும் ஆய்வு செய்வதில்லை. விருதுக்காக எந்த எழுத்தாளனும் எழுதுவது இல்லை. அவர்வர் செய்யும் வேலையை ஆர்வத்துடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் செய்கிறார்கள், அங்கீகாரம் கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். ஆனால், நீங்கள் செய்த செயல் உனக்கு முழு திருப்தி தந்தால் அதுதான் ஆகப்பெரிய பரிசு.
gyaanaguru.com Changed status to publish October 30, 2024