ஞானகுரு :
சுயநலம் என்பது தவறு இல்லை. கடவுள் மனிதனாகப் பிறந்து வந்தாலும் முதலில் அவருடைய சுயநலத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார். சுயநலத் தேவைகள் நிறைவேறிய மனிதராலே பொதுநலத்திற்கு மாற முடியும். ஆனால், தன் சுயநலத் தேவைகள் நிறைவேறியதுகூட தெரியாமல், நிறைய மனிதர்கள் கடைசி மூச்சு வரை, தனக்காக மட்டுமே வாழ்கிறார்கள். இத்தனை சட்டை இருக்கும்போது இன்னொரு சட்டை தேவையா. இதை வேறு ஒருவருக்குக் கொடுத்துவிடலாமா என்ற சின்ன யோசனை தோன்றினால் கூட போதும். சுயநலச் சேற்றில் இருந்து பொதுநலப் பாதைக்குப் போய்விட முடியும். பிறருக்குக் கொடுப்பதில் கிடைக்கும் சந்தோஷத்தை, கொடுப்பவர் மட்டுமே அனுபவிக்க முடியும்.
gyaanaguru.com Changed status to publish October 1, 2024