ஞானகுரு :
இந்த உலகில் யாருமே போராட்டமான வாழ்க்கையைத் தேர்வு செய்வதில்லை. ஆனால் வாழ்க்கையில் போராட்டம் நிகழும் நேரத்தில் அதை தைரியமாக எதிர்கொள்ளும் மனநிலை இருப்பது முக்கியம். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு கடந்துசெல்வதுதான் சரியான வழி. அதுவே ஞானகுருவாக மாற விரும்பும் ஒவ்வொரு மனிதரும் கடைபிடிக்க வேண்டிய வழி.
ஒருவருக்கு பெரும் போராட்டமாக இருக்கும் ஒரு விஷயம், இன்னொருவருக்கு ரொம்பவே சாதாரணமாகத் தெரியும். தன்னைத் தவிர எல்லா மனிதர்களும் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்ற கற்பனையே நிறைய மனிதர்களுக்கு பெரும் துன்பமாக இருக்கிறது. தன்னுடைய வாழ்வு, தன்னுடைய பயணம் என்று நகர்பவருக்கு எதுவும் சுமையாக இருக்காது.
gyaanaguru.com Changed status to publish July 6, 2024