ஞானகுரு :
மாந்திரீகம், செய்வினை எல்லாம் உண்மை என்றால் இந்த உலகில் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், வெற்றியாளர்கள் என யாருமே உயிருடன் இருக்க முடியாது. ஏனென்றால், இவர்கள் நிறைய போட்டிகளை, எதிரிகளை வென்றே இந்த இடத்துக்கு வந்திருப்பார்கள். எனவே, இவற்றில் எந்த உண்மையும் கிடையாது என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள்.
அடுத்தபடியாக, முன்னேற வேண்டும் என்று நேர்மறையாக சிந்தித்தால் மட்டுமே உங்களால் வெற்றியை நோக்கி நகர முடியும். எதிரி அழிய வேண்டும் என்று எதிர்மறையாக சிந்தித்தால் உங்கள் வாழ்க்கையும் அந்த பாதையில் தான் நகரும். பிறருக்கு வெட்டிய குழிக்குள் நீங்களும் விழுந்துவிடுவீர்கள். எதிரியைத் தாண்டி பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நல்லவிதமாக சிந்தியுங்கள். வெற்றி கிடைக்கும், எதிரிகளும் காணாமல் போவார்கள்.
gyaanaguru.com Changed status to publish September 7, 2024