ஞானகுரு :
எது அவசியம், எது ஆடம்பரம் என்று தீர்மானிப்பது அவரவர் உரிமை. ஒரு காலத்தில் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், தொலைக்காட்சி போன்றவை ஆடம்பரப் பொருட்களாக இருந்தன. ஆனால் இன்று ஏசி, கார் போன்றவை கூட அத்தியாவசியப் பட்டியலுக்குள் வந்துவிட்டன. பிள்ளைகளை கல்வியை இலவசமாக சொல்லித்தரும் அரசுப் பள்ளியிலும் படிக்கவைக்கலாம், அதிக கட்டணம் கட்டி தனியார் பள்ளிக்கும் அனுப்பலாம்.
அதேநேரம் ஒவ்வொரு நபரும், வேண்டும் என்பதற்கும் தேவை என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு செலவழிக்க வேண்டும். அதாவது வேண்டும் என்பதற்காக கஷ்டப்படலாம். தேவை என்பதை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம், கஷ்டப்பட அவசியம் இல்லை.
ஆகவே, மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பார்க்காமல், நாம் எப்படி செலவழிக்க வேண்டும் என்பதைக் கவனிப்பதே போதும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
gyaanaguru.com Changed status to publish January 1, 2025