ஞானகுரு
கோயில் யானைகள். காட்டில் தன்னிஷ்டத்துக்கு சுற்றித்திரிய வேண்டிய பிரமாண்ட விலங்கு அது. நூறு கிலோவுக்கு மேல் இலை, தழை, கனிகளை தின்று வளரவேண்டிய யானைக்கு, சோற்று உருண்டை கொடுத்து பசியைக் கட்டுப்படுத்துகிறான் மனிதன். விசித்திர படைப்பான யானையை ரோட்டில் பிச்சையெடுக்க வைத்து காசுக்காக வாழ்த்தச் சொல்கிறார்கள். கோயில், வீடு போன்ற இடங்களில் வைத்து வளர்க்கவேண்டிய விலங்கு அல்ல யானை. பத்தடி அறைக்குள் மனிதன் அடைந்துகிடப்பதை போல் சின்ன கொட்டகைக்குள் யானையை கட்டிப்போட்டு வளர்ப்பது முட்டாள்தனம். யானை மட்டுமல்ல குதிரை, நாய், பூனை போன்ற எந்த ஒரு விலங்கையும் பறவையையும் வீட்டில் வளர்ப்பது அடிமைத்தனத்தின் மிச்சம்தான்.
காட்டில் யானைக்கு போதிய உணவு இல்லையே என்று மனிதன் கவலைப்பட அவசியமே இல்லை. தன் வயிற்றுக்குத் தேவையான உணவை யானையால் தேடிக்கொள்ள முடியும். இப்படித்தான் காலம்காலமாக யானைகள் உயிர் வாழ்ந்து வந்திருக்கின்றன. அவை வாழ்வதும் அழிவதும் இயற்கையின் முடிவாக இருக்கட்டும்.