ஞானகுரு :
குலதெய்வம் என்பது முன்னோர் வழிபாடு. தியாகம் செய்தவர்கள், துரோகத்தினால் இறந்தவர்கள், நிறைவேறாத ஆசையில் மரணம் அடைந்தவர்கள், மானம் காக்க மரணித்தவர்கள் என்று ஏதேனும் ஒரு வகையில் செத்துப் போனவர்களின் ஆன்மா அங்கேயே இருக்கும் என்ற நம்பிக்கையில், அவர்களை திருப்திபடுத்துவதற்காகவே குலதெய்வ வழிபாடு செய்யப்படுகிறது. கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டவர்களுக்கு இதுவே பெரும்தெய்வமாக மாறிவிட்டது. அவர்களை கும்பிட்டால் ஆசிர்வாதம் தருவார்கள் இல்லையென்றால் சாபம் கிடைக்கும் என்று அஞ்சுவதாலே வருடம் ஒரு முறையாவது எட்டிப் பார்க்கிறார்கள்.
வாழும் காலத்தில் கொசு, கோழி தொடங்கி எத்தனை உயிர்களை மனிதன் கொல்கிறான்… இவற்றுக்கு எல்லாம் ஆன்மா கிடையாதா..? வாழும் காலத்தில் மனிதர்கள் ஒருவரையொருவர் மதிப்பது போதும். செத்தவர்களுக்கு நீங்கள் எத்தனை செய்தாலும் அது மூடத்தனம். செத்தவர்களை மறந்துவிட்டு உயிருடன் இருப்பவர்களைக் கொண்டாடுங்கள். அது போதும்.