ஞானகுரு :
ஒரு பள்ளிக்கூடம் நன்றாக இயங்கிக்கொண்டு இருக்கும். அந்த பள்ளிக்கு ஒரு புதிய நிர்வாகி வருவார். காலை 9 மணிக்கு தொடங்கும் பள்ளி நேரத்தை 8:45 என்று மாற்றி அமைத்து, அப்போதுதான் மாணவர்கள் அதிக சுறுசுறுப்புடன் திகழ்வார்கள் என்று ஒரு காரணமும் சொல்வார். மீண்டும் வேறு ஒரு நிர்வாகி வருவார். அவர் மீண்டும் 9 மணிக்கு மாற்றியமைத்து, அதற்கும் ஒரு காரணம் சொல்வார். இப்படியெல்லாம் மாற்றங்கள் செய்தால்தான், புதிய நிர்வாகி வந்திருப்பதும் செயல்படுவதும் மற்றவர்களுக்குத் தெரியும். இப்படித்தான் இன்றைய அரசியலிலும் நடக்கிறது. தேவையோ இல்லையோ மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கும்
gyaanaguru.com Changed status to publish June 30, 2024