ஞானகுரு :
மிகவும் சிரமப்பட்டு பணம் சம்பாதித்த நபர்களுக்கு, அந்த பணத்தை தேவையின்றி செலவழிப்பதற்கு மனம் வருவதில்லை. உங்களுக்கு நன்றாக செலவழிக்கும் மனநிலை வர வேண்டும் என்றால் புரோன்னி வேர் எழுதிய, ‘தி டாப் ஃபைவ் ரிகரெட்ஸ் ஆஃப் டையிங்’ என்ற புத்தகம் படித்துப் பாருங்கள்.
முதியவர்களுக்கு நர்ஸாக இருந்த புரோன்னி, மரணத்தருவாயில் இருந்த நோயாளிகளிடம் பேசியதைத் தொகுத்து எழுதப்பட்ட புத்தகம். அவர்கள் அதிகம் வருத்தப்பட்ட ஐந்து விஷயங்கள் இவை.
- நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாம்.
- என் நண்பர்களுடன் தொடர்பில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
- என்னுடைய விருப்பத்தை தைரியமாக சொல்லியிருக்கலாம்.
- இத்தனை கஷ்டப்பட்டு நான் உழைத்திருக்கத் தேவையில்லை.
- மற்றவர்களுக்காக வாழாமல் எனக்காகவும் கொஞ்ச நாட்கள் வாழ்ந்திருக்கலாம்.
மரணத் தருவாயில் யாரும் பொய் சொல்வதற்கு அவசியம் இல்லை. இவர்கள் அனைவரும் நன்றாக சம்பாதித்து அதனை அனுபவிக்க முடியாமல், தங்கள் மனதில் இருக்கும் ஆசையை வெளிக்காட்ட முடியாமல், மற்றவர்களுக்காகவே வாழ்ந்தவர்கள். இனியாவது, உங்கள் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும் வாழுங்கள். நீங்கள் சம்பாதித்த பணத்தை செலவழிப்பதில் எந்த குற்றவுணர்வும் வேண்டியதில்லை.