ஞானகுரு :
எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழும் நிலை உருவானது. ஒவ்வொரு கூட்டமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக குடும்பம் என்ற அமைப்பு உருவானது. ஆனால், இந்த குடும்பம் என்பது ஒரு தற்காலிகப் பாதுகாப்பு மட்டுமே. யாரும் யாருக்கும் நிஜமான சொந்தம் இல்லை என்பதே உண்மை. இந்த வார்த்தையில் சந்தேகம் இருந்தால் உங்களை சுற்றிலும் உற்றுப் பாருங்கள். அப்பா, அம்மா, பிள்ளை, அண்ணன், தம்பி செத்துவிட்டதற்காக, தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா..? வீடு வரை உறவு. அந்த வீடு தான் குடும்பம்.
gyaanaguru.com Changed status to publish July 17, 2024