ஞானகுரு : .
ஓர் அறையில் கெட்ட வாடை வீசுகிறது என்றால், உள்ளே என்ன கிடக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினால் மட்டுமே துர்வாடையை நிரந்தரமாகப் போக்க முடியும். அதைவிட்டு அறைக்குள் நறுமணத்தை திணிப்பது வீண். எனவே, பயம் ஏன் வருகிறது, எதற்காக வருகிறது என்பதை நிதானமாக யோசித்து தெளிவு அடைவது தான் அதனை எதிர்கொள்ளும் முதல் வழி.
சின்ன வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயத்தைக் காட்டுகிறார்கள். மாணவனுக்கு பரிட்சையைக் கண்டும், ஆசிரியரைக் கண்டும் பயம் வரும். திறமை இல்லாத ஊழியனுக்கு உயர் அதிகாரிகளைக் கண்டு பயம் வரும். சட்டத்திற்கு புறம்பான காரியம் செய்பவருக்கு காவலர்களை கண்டாலே பயம் வரும். அதுபோல், உங்களுக்கு ஏன் பயன் வருகிறது என்பதற்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள். காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அந்த பயத்தை எதிர்கொள்வது எளிது.
ஒரு சில பயம் நன்மை செய்யும். திருடர் நடமாடும் பகுதியில் இரவு நேரத்தில் தனியே செல்வதற்கு பயப்படுவதே நல்லது. எனவே எல்லா பயத்தையும் தவிர்க்கத் தேவையில்லை.