ஞானகுரு ;
முந்தைய கால அரசர்களுக்குக்கூட கிடைக்காத சொகுசு வாழ்க்கை இன்றைய மனிதனுக்கு கிடைத்துள்ளது. ஆனால் அவை எல்லாமே செயற்கை சந்தோஷம்தான். சாணம் போட்டு மெழுகப்பட்ட மண் தரையில் கிடைத்த குளிர்ச்சியை பெறுவதற்கு, இன்று கிரானைட் தரை வேண்டியுள்ளது. மரம் கொடுத்த காற்றை பெற மின்விசிறி தேவைப்படுகிறது. அனைத்து வசதிகளையும் பெறுவதற்கு உதவும் மின்சாரம் இல்லையென்றால் கணினி தொடங்கி குளிர்சாதனம் வரை எதுவும் இயங்காது. அதனால் இப்போது இயந்திரங்களுக்கு அடிமையாக வாழவேண்டியுள்ளது. வாழ்வின் சொகுசுக்காக அத்தனை மின்சாதன பொருட்களையும் வாங்கியாகவேண்டிய கட்டாயத்துக்கு அனைத்து மனிதர்களையும் தள்ளி, கடன்காரர்களாக மாற்றியிருப்பது அந்த லட்சியவாதிகள்தான். சுலபமான வாழ்க்கைக்குக் கஷ்டப்படுவத்ல் இல்லை மகிழ்ச்சி.
gyaanaguru.com Changed status to publish November 1, 2024