ஞானகுரு ;
லட்சியத்தை அடைவதுதான் மகிழ்ச்சி என்று எண்ணாமல், மகிழ்ச்சி அடையும் ஒவ்வொரு கணத்திலும் லட்சியம் நிறைவேறுவதாக நினைப்பதுதான் புத்திசாலித்தனமான வாழ்வு. ஆனால் லட்சியத்தை மனதில் புதைத்து வைத்திருப்பவர், இடையில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு குற்ற உணர்ச்சி அடைகிறார்கள். சந்தோஷமாக இருக்கத் தொடங்கினால் லட்சியத்தை அடையமுடியாமல் போகும் என்று எண்ணமே, அவர்களை விலகி நிற்கச் சொல்கிறது. ஆனால், சின்னச்சின்ன முன்னேற்றத்துக்கும் மகிழ்ச்சியைக் கொண்டாடுபவராலே, லட்சியத்தை அடைய முடியும் என்பதே வாழ்வியல் உண்மை.
gyaanaguru.com Changed status to publish November 1, 2024