ஞானகுரு ;
பண்டிகை என்றாலே கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு. எனவே, மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். ஆனால், பட்டாசு வெடிக்க வேண்டுமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
சிவகாசி தொழிலாளர்களுக்காக யாரும் அதை வெடிக்கத் தேவையில்லை. ஏனென்றால் பட்டாசு வெடிப்பதால் தயாரித்தவருக்கும் விற்பனை செய்தவருக்கும் மட்டுமே லாபம். அந்த தொழிலாளிக்கு கூலி மட்டும் தான். அந்தக் கூலிக்காக தங்கள் ஆரோக்கியத்தை தினம் தினம் இழக்கிறார்கள்.
இந்த தொழில் இல்லையென்றால் அவர்கள் செத்துப்போக மாட்டார்கள். அச்சுத் தொழில், நிப்புக் கம்பெனிகள், லாட்டரிகள், நாடகம் போன்ற தொழிலில் இருந்தவர்கள் எப்படி மாறினார்களோ, அப்படியே இவர்களும் தப்பிப் பிழைப்பார்கள். இந்த தொழிலில் நீடித்திருந்தால் நிச்சயம் நோயினால் சீக்கிரமே செத்துப் போவார்கள். அதனால் பாவம், புண்ணியம் எதுவும் பார்க்கத் தேவையில்லை. உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என்றால் வெடியுங்கள். பிறரை வாழ வைப்பதற்காக வெடிக்கிறேன் என்று சொல்லி தொழிலாளர்கள் ஆரோக்கியத்துக்கு கொள்ளி வைக்காதீர்கள்.