ஞானகுரு :
பாராட்டுவதற்காக ஓவியர்கள் படம் வரைவதில்லை. பரிசுக்காக கவிஞர்கள் எழுதுவதில்லை. தங்கள் படைப்பில் திருப்தி கிடைப்பதாலே வரைகிறார்கள், எழுதுகிறார்கள். அதேபோல், பிறருக்குக் கொடுப்பதில் திருப்தியும் சந்தோஷமும் அடைபவர்கள் மகிழ்ச்சியுடன் கொடுக்கிறார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று இதையே சொல்கிறார்கள்.
கொடுப்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது, கிடைப்பதில் அல்ல. எனவே உதவி செய்வதால் புண்ணியம், சொர்க்கம் கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து போக வேண்டாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
gyaanaguru.com Changed status to publish December 27, 2024