சாலைகளுக்கு குவாலிட்டி இன்டிகேட்டர்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 233

சென்னை பெருநகர மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்த தினத்திலிருந்தே சாலைகள் மேம்பாட்டுக்காக நிறைய ஆய்வுகளும், ஏராளமான ஆலோசனைகளும் நடத்தினார். அதனால், சாலைகள் சேதமடைவதற்கு முக்கியமான காரணங்கள் என்னவென்று கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுத்தார்.

பல்வேறு காரணங்களுக்காக ரோடுகளை தோண்டிவிட்டு, அதனை செம்மையாக மூடாமல் விட்டுச்செல்லும் அவலத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார். இதையடுத்து சாலை சேதமடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மழை நீர் தேங்கி நிற்பது ஆகும். சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர் காரணமாக எளிதில் சேதமடைகின்றன. இதற்காக சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதைத் தடுக்கும் வகையில் சாய்தள சாலைகள் போடப்பட்டன.

அதன்பிறகும் மழை நீர் சரியாக வடிந்து செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. ஆகவே, மழைநீர் வடிகால்வாய்களில், தண்ணீர் வேகமாக வடிந்து  செல்வதற்கு ஏற்ற வகையில்,  இரண்டு 160 மி.மீ. விட்டமுடைய  இணை குழாய்கள் அமைக்கப்பட்டன. மேலும், அந்த குழாய்கள் செவ்வக கிரேட்டிங்குகள்  மூலம் பாதுகாப்பாக மூடப்பட்டன. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது குறைந்தது, சாலையின் ஆயுள் அதிகரித்தது.

 பெருநகர சென்னை மாநகராட்சியால் அமைக்கப்படும் அனைத்து சாலைகளும், பேவ்மென்ட் குவாலிடி இன்டிகேட்டர் எனப்படும் பி.க்யூ.ஐ. இயந்திரம் மூலம் தரப் பரிசோதனை செய்வதை மேயர் சைதை துரைசாமி கட்டாயமாக்கினார். இந்த இயந்திரம் மூலம் சாலைகளின் தரம் முறையாகப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, சாலைப்  பணிகள்  மேற்கொண்டதற்கு  பணம் பட்டுவாடா  செய்யப்படும் நடைமுறையை மாநகராட்சியில் கொண்டுவந்தார்.  

சாலைப் பணியில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் மேயர் சைதை துரைசாமியின் காலத்தில் அமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சாலைகளில் பெரும்பாலானவை தரமாக இருந்தன. ஒருசில பழுதடைந்த சாலைகள் கண்டறியப்பட்டு, ஒப்பந்ததாரரால் சீரமைப்புப் பணி மேற்கொள்வதற்கு உத்தரவிட்டார். இதனால் மேயர் சைதை துரைசாமியை சாலைகளின் பாதுகாவலன் என்று மக்கள் பாராட்டினார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment