பாதுகாக்கப்பட்ட மாநகராட்சி நிலம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி –  272

முடியாது என்று சொல்வதை எல்லாம் முடித்துக் காட்டுபவரே மேயர் சைதை துரைசாமி. அதனால் தான் ஆவணங்களை எல்லாம் கம்ப்யூட்டர் மயமாக்க எடுத்த முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியபோதும், அந்த முயற்சியை மேற்கொள்வதில் உறுதியாக இருந்தார். அவருக்கு முந்தைய காலங்களில் ஆவணங்களில் திருத்தம், ஆவணம் கிழிப்பு, காணாமல் போதல் போன்றவை நடந்தது போன்று மேயர் துரைசாமி காலத்தில் மட்டுமின்றி எந்தக் காலத்திலும் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

அதனால் அனைத்து ஆவணங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார். அதோடு, ஆவணங்களில் யாரும் எந்த திருத்தங்களும் செய்துவிட முடியாத அளவுக்கு நிலம் மற்றும் உடைமைத் துறை மாற்றம் அடைந்தது. அதனால் யாரும் முறைகேடு, தில்லுமுல்லு செய்து மாநகராட்சி நிலத்தை சொந்தம் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி அத்தனை ஆவணங்களும் கணினி மயமாக மாறியதால் ஊழியர்களுக்கு பணியாற்றுவதும் எளிமையாகிப் போனது. நிலம் தொடர்பான எந்த ஒரு தகவல் என்றாலும் உடனடியாக எளிதில் பெற்றுக்கொள்வது சாத்தியமானது. இதையடுத்து ஆவணங்களில் திருத்தம் செய்து மோசடி செய்வது முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டது. அதோடு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நில அளவையாளர் எனப்படும் சர்வேயர் நியமிக்கப்பட்டு, ஏ ரிஜிஸ்தர் பராமரிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக மாநகராட்சி நிலம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டன. அதோடு, தொடர்ந்து நில அபகரிப்பில் தில்லுமுல்லு செய்து ஏமாற்றி வந்தவர்கள் அதிர்ந்தே போனார்கள். ஆவணங்கள் காணாமல் போகும் அவலங்களும் முற்றிலும் நின்று போயின. பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆவணங்களையும் நிலங்களையும் காப்பாற்றிய மேயர் சைதை துரைசாமியின் நடவடிக்கை எல்லோராலும் பாராட்டப்பட்டன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment