சென்னையில் திட்டமிடப்பட்ட புதிய பாலங்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி –  264

பெருநகர சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பாலங்களும் அவசியம் என்று முடிவெடுத்த மேயர் சைதை துரைசாமி காலத்தில் நிறைய பாலங்கள் விறுவிறுவென கட்டி முடிக்கப்பட்டன. அதோடு  கொரட்டூர் ஏரி உபரிநீர் கால்வாயின் குறுக்கே கால்வாய் சாலையில் மதனாங்குப்பம் பிரதான சாலை அருகேயுள்ள தரைபாலத்தினை இடித்துவிட்டு புதிய பெட்டக வடிவ பாலம் அமைக்கும் பணிக்கு  மதிப்பீட்டுப்  பணிகள் முடிவடைந்தன.

ராம்நகர் 3வது விரிவு பெட்டக வடிவ பாலம் அமைக்கும் பணிக்கான மதிப்பீடு தொடங்கப்பட்டது. இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டால், நாராயணபுரம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், இந்தப் பாலம் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு சென்றடையும். இதனால் ராம் நகர், மயிலை பாலாஜி நகர் விரிவு 1, 2 மற்றும் 3வது தெரு பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் அபாயம் நீங்கும்.   டாக்டர். சுப்பாராவ் நகரில் 5 கண்கள் கொண்ட பெட்டக வடிவ பாலம் கட்டப்பட்டது.

அதோடு பல்வேறு பாலங்கள் தொடங்குவதற்கான  பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் எண்ணூர் நெடுஞ்சாலை ரயில்வே சந்திக்கடவு எண். 2எ மற்றும் மணலி சாலை ரயில்வே சந்திக்கடவு எண். 2பி-யை ஒருங்கிணைத்து மேம்பாலம், கொளத்தூர் வில்லிவாக்கம் சந்திக்கடவு எண். 1ல் மேம்பாலம், ஓட்டேரி நல்லாவின் குறுக்கே ஸ்டீபன்சன் சாலையில் உள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிதாக பாலம் அமைக்கும் பணி, ஆலந்தூர் ஏஜி.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி எதிரில் ரயில்வே  சந்திக்கடவு எண்.15-ல் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தமிழ்நாடு நகர்புற  உள் கட்டமைப்பு  நிதி நிறுவனம்  மூலம் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை நீட்டித்து வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் வரை இணைக்கும் மேம்பாலம் . ஈகா தியேட்டர் சந்திப்பு முதல் வள்ளுவர் கோட்டம் சந்திப்பு வரை மேம்பாலம், மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம், வடபழனி பேருந்து நிலையம் அருகே பாதசாரிகள் சுரங்கப்பாதை, வேளச்சேரி நெடுஞ்சாலையில் 100 அடி சாலை சந்திப்பு (ம) ஐந்து பர்லாங் சாலை சந்திப்பில் மேம்பாலம் திட்டமிடப்பட்டன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment