கூவம் மறு சீரமைப்புக்குத் திட்ட அறிக்கை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 365

கூவம் சீரமைப்பு என்பது கடமைக்குத் தீட்டப்படும் திட்டமாக இல்லாமல், முழு பலன் கிடைக்க வேண்டும் என்பதற்கு மேயர் சைதை துரைசாமி மிகுந்த அக்கறையுடன் வடிவமைத்த அறிக்கைக்கு ஜெயலலிதா முழு ஆதரவு கொடுத்தார். இது குறித்து சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’புரட்சித் தலைவி அம்மா அவர்கள், விரைந்த  செயல் திறனோடும், விவேகமான நிர்வாகத் திறனோடும், மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டிய 60 துணைத் திட்டங்களையும், அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் முடிக்க வேண்டிய  ஏழு துணைத் திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, கூவம் நதி என்றால் சென்னையின் அவலம் என்ற நிலையை மாற்றி, ‘கூவம் நதி,  அது சென்னையின் பெருமை’என்ற பெருமையை மீட்டுத் தருவார்கள்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள், கூவம் நதியை முழுமையாக சீரமைத்து மீட்டெடுப்பதற்கான மாபெரும் திட்டத்தை தொடங்கி வைத்து,  முதற்கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சென்னை மாநகர மக்களின் நெஞ்சங்களில் நம்பிக்கையையும், இதயங்களுக்கு மகிழ்ச்சியையும் ஓரு சேர வழங்கியுள்ளார்கள்..’’ என்று பாராட்டு வழங்கினார்.

இதன் அடிப்படையில் சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை ஒருங்கிணைந்த கூவம் நதி  மறு சீரமைப்பு  பணி மேற்கொள்ள அக்டோர் 2012-ல் எல்.கே.எஸ். என்ற நிறுவனத்தை ஆலோசகராக நியமித்தது.  எல்.கே.எஸ். நிறுவனம் கூவம் நதி மறு சீரமைப்பு  பணிக்காக 2014ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி தொடக்கத்தில்  ரூ.3833.62 கோடியில் புனரமைப்பு பணி மேற்கொள்ள அறிக்கை சமர்ப்பித்தது.

அதன் பின்னர் தொடர் ஆலோசனைகள் ஒவ்வொரு துறையாக நடத்தி,  பின்னர் நவம்பர் 2014-ல் இறுதி விரிவான திட்ட அறிக்கையில் ரூ.1934.84 கோடியில் புனரமைப்பு பணி மேற்கொள்ள அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி மூன்று ஆண்டுகளுக்குள் முடியக்கூடிய குறுகிய காலப் பணிகள், 4 முதல் 12 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் இடைக்காலப்  பணிகள் மற்றும் 13 முதல் 25 ஆண்டுகளில் முடியக்கூடிய  நீண்ட கால பணிகள் என மூன்று கட்டங்களாகப் பணிகள் பிரிக்கப்பட்டன. 

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment