பொதுநலச் சங்கத்தினருக்குப் பரிசு, பாராட்டு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 128

அதிகாலையில் வீடு தேடி வரும் பொதுநலச் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுக்குமல்லி காபி கொடுத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதிகாலை 4:30 மணிக்கே எழுந்து குளித்து மேயர் சைதை துரைசாமி தயாராகிவிடுவார் என்பதால், பொதுநலச் சங்கத்தினர் கொண்டுவந்த புகார் மனுக்களை பெற்றுக்கொள்வதுடன், அந்த குறை பற்றி விளக்கமாக கேட்டுக் கொள்வார். அது மட்டுமின்றி, அந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கும் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும் வேறு வழிகள் இருக்கின்றனவா என்பதையும் பொதுநலச் சங்கத்தினரிடம் கேட்டு அறிந்துகொள்வார்.

இவர்களிடம் பெறப்பட்ட மனுக்களை எல்லாம் மாநகராட்சியில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, அதன் மீதான நடவடிக்கை குறித்தும் தெளிவாக அறிந்து கொள்வார் சைதை துரைசாமி. அதோடு, எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட பொதுநலச் சங்கத்தினருக்கு தகவல்களும் தெரிவிக்கப்பட்டன.

ஒவ்வொரு பொதுநலச் சங்கமும் சென்னை மாநகராட்சிக்கு அனுப்பிய புகார்களின் எண்ணிக்கை, அதில் நிறைவேற்றப்பட்ட புகார் பணிகள், அந்த புகார் மீது நடைபெறும் பணிகள், இன்னமும் தொடங்கப்படாத பணிகள் போன்ற தகவல்கள் எல்லாம் மிகத் தெளிவாக சேகரிக்கப்பட்டன.

இதையடுத்து வீடு தேடி வரும் பொதுநலச் சங்கத்தினர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதன் மூலம் அவரவர் பகுதியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் பொதுமக்களுக்கு ஏற்பட்டதை முக்கியமான மாற்றமாகச் சொல்ல வேண்டும்.

இப்படி தேடி வந்து புகார் தரும் பொதுநலச் சங்கத்தினர் சேவைகளை ஊக்குவிப்பதற்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான நடவடிக்கை மேற்கொண்டார் மேயர் சைதை துரைசாமி. ஆம், ஒவ்வொரு வகையிலும் சிறப்பாக செயல்பட்ட பொதுநலச் சங்கங்களைத் தேர்வு செய்து பரிசு வழங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பரிசு வழங்கும் விழாவை பொதுமக்கள் மத்தியில் கொண்டாட வேண்டும் என்ற சிந்தனையையும் அதில் புகுத்தினார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment