அரசியல் திருப்புமுனை தாம்பரம் ரசிகர் மன்றக் கூட்டம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 49

1972ம் ஆண்டு. தி.மு.க. ஆட்சியில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களுக்கு கடும் நெருக்கடி உருவாக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். மன்றங்களைக் கலைத்துவிட்டு, மு.க.முத்து பெயரில் ரசிகர் மன்றங்களை துவக்குவதற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளைக்கழக செயலாளர்கள் வரை தீவிரம் காட்டினார்கள். தி.மு.க. மாநாட்டிலும் மு.க.முத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

இந்த நிகழ்வுகள் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு பெரும் வேதனை கொடுத்த நேரத்தில், தமிழகம் முழுக்க 34 எம்.ஜி.ஆர் மன்றங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு மு.க. முத்து ரசிகர் மன்றங்களாய் செயல்படத் தொடங்கின. இனியும் அமைதியாக இருப்பது சரிவராது என்று சைதை துரைசாமி போன்ற எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் முடிவு செய்தனர். இந்த பிரச்னைகளுக்கு உடனடியாக ஒரு தீர்வு காண விரும்பிய சைதை துரைசாமி, எம்.ஜி.ஆர். மன்றங்களின் நிர்வாகிகளை எல்லாம் சந்தித்தார்.

இதன் விளைவாக கலையுலகப் பேரொளி தலைமை எம்.ஜி.ஆர் மன்றத்தின் நிர்வாகிகள் சார்பாக நடராசனும் அப்போது பிரச்சாரக் குழு செயலாளராக இருந்த துரைசாமியும் மன்றச் செயலாளர்களும், தமிழ்நாடு முழுமைக்கும் இருக்கின்ற எம்.ஜி.ஆர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளும் 1972 செப்டம்பர் மாதம் தாம்பரம் பாலுவின் வீட்டில் ஒன்று கூடி ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.

அந்த கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முதலாவது, எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களுக்கு தனிக்கொடி அந்தஸ்து வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. இரண்டாவது தீர்மானமாக, தென்னக புரட்சி நடிகர் எம்ஜிஆர் புகழ் பரப்பும் கலைக்குழு அமைக்க  வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்த இரண்டு தீர்மானமும் நிறைவேறியதும், அடுத்த கட்டமாக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற கொடிக்கு என்ன முத்திரை அல்லது சின்னம் வைப்பது என்ற ஆலோசனை நடந்தது. ஒவ்வொரு நபரும் அவரவர் விருப்பத்தைச் சொல்கிறார்கள். அப்போது துரைசாமி மட்டும் புரட்சித்தலைவருக்கு எது பிடிக்குமோ, அதையே சின்னமாக வைக்க வேண்டும் என்று சொல்கிறார்.

சைதை துரைசாமி சொல்வதை அத்தனை பேரும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். புரட்சித்தலைவருக்குப் பிடித்த சின்னம் எது..?

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment