கவிஞர் வைரமுத்து நீரிழிவு கவிதை

நீரிழிவு நோய் பற்றி கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் கவிதை வைரலாகியுள்ளது. படியுங்கள், பகிருங்கள்.

நீரிழிவு என்பது நோயல்ல;

குறைபாடு.

உட்கார்ந்திருப்பவனுக்கும் வரலாம்;

உழுபவனுக்கும் இது வரலாம்

பெரும்பாலும் இது

கணையத்தின் வேலைநிறுத்தம்;

ஆனால் அஞ்சற்க.

முறையான உணவுக்கொள்கை

மூச்சுவாங்கும் உடற்பயிற்சி

சரியான மருந்தெடுப்பு

இந்த மூன்றினாலும்

இதைக் காணாமற் செய்யலாம்

அல்லது கட்டுப்படுத்தலாம்.

நீரிழிவு

கொரில்லா மாதிரி;

ஓடிவிட்டது என்று

பெருமூச்சு விட்டால்

பதுங்கி உங்கள்மீது

பாயும் சட்டென்று.

.

நீரிழிவு என்பது

ஒரு வாழ்க்கை முறை

அதற்குத் தயாரித்துக்கொண்டால்

தற்காக்கலாம்.

நீரிழிவு கொண்டோர்

நிலைகுலையத் தேவையில்லை

தங்களைச் ’சக்கர’வர்த்திகள்

என்று சொல்லிக்கொள்ளலாம்.

Leave a Comment