காதலெனும் பூங்காற்று

Image

நீ சந்தித்த ஆண்களில்,

நான் வேறுபட்டவன்.

நான் சந்தித்த பெண்களில்,

நீ வேறுபட்டவள்.

என்றெல்லாம் எண்ணிக்கொண்டு

நித்தம் அதனை நிரூபிக்கும்

முயற்சிகளில் சோர்ந்து

அப்படியெல்லாம் இல்லை

இருவரும் சாதாரணமானவர்கள்தான்

என்றுணரும் நாளில்

எல்லோரையும் போல் நாம்

காதலிக்கத் தொடங்கியிருப்போம்.

  • யாத்திரி

Leave a Comment