நோயாளி : டாக்டர் என்னை காப்பாத்துங்க… செத்துடுவேனோன்னு பயமா இருக்கு…
டாக்டர் : என்னப்பா, என்னாச்சு.
நோயாளி : நான் தூங்கும்போது என் வாய்க்குள்ள ஒரு கரப்பான் பூச்சி போயிடுச்சு..
டாக்டர் : அதுல ஒண்ணும் பிரச்னை இல்லை, அது தானா செத்துப்போயி ஜீரணமாயிடும்..
நோயாளி : இல்ல டாக்டர். நான் கரப்பான் பூச்சியைக் கொல்றதுக்கு வைச்சிருந்த ஸ்பிரேயை எடுத்து வாயிலே அடிச்சிட்டேன்..
டாக்டர் : ????
…………………………….
ஆசிரியர் : 5 ஆப்பிளை 4 பேருக்கு எப்படி குடுக்க முடியும்..?
மாணவன் : ஜூஸ் போட்டா ஈசியா கொடுக்கலாம் மிஸ்…
…………………………………..
அவர் : எந்த ஊருக்குப் போறதா இருந்தாலும் 10 நிமிஷத்துல போயிடலாம்னு சொல்றாரே…. யாரு அவர்…?
இவர் : வேற யாரு, ரியல் எஸ்டேட் பார்ட்டிதான்.
…………………………………………
நீதிபதி : காதல் திருமணம் செய்பவர்களை யாரும் தடுக்கக்கூடாது என்பதுதாங்க சட்டம்…
கணவன் ; புருஷன்காரனுக்கும் அந்த ரைட்ஸ் இல்லையா யுவர் ஆனர்…
……………………………….
சிறுவன் : அப்பா, நாளைக்கு நாம கோடீஸ்வரனா மாறிடலாம்…
அப்பா : எப்படிடா…
சிறுவன் : நாளைக்கு பைசாவை எப்படி ரூபாயா மாத்துறதுன்னு எங்க மிஸ் சொல்லித்தருவாங்களாம்…
………………………………..
நீதிபதி : இவர் வீட்டுல கொள்ளையடிச்ச பணத்தை என்ன செஞ்சே..
குற்றவாளி : பையனை எல்.கே.ஜி.ல சேர்த்துவிட்டேன் யுவர் ஆனர்..
நீதிபதி : அப்படின்னா மீதிப் பணத்துக்கு எங்கே கொள்ளையடிச்சே..?
……………………….