என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 74
கொசு கட்டுப்படுத்தும் திட்டத்தை ஒரு வழக்கமான கடமையாகச் செய்யாமல், திறம்பட நடைமுறைப்படுத்த மேயர் சைதை துரைசாமி விரும்பினார். ஆகவே, கொசுக்கள் பற்றி நிறைய அறிந்துகொண்டார். உலகெங்கும் 3000 வகையிலான கொசுக்கள் இருந்தாலும், மூன்று வகையான கொசுக்களே அதிகம் ஆபத்தாக அறியப்படுகின்றன.
- மலேரியாவை உருவாக்கும் அனாபெலஸ் கொசுக்கள்
- டெங்கு நோய் உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள்
- யானைக்கால் நோய் உருவாக்கும் குளக்ஸ் கொசுக்கள்
இவைதவிர ஏடிஸ் எஜிப்டே, ஏடிஸ் ஆல்போபிக்டஸ் கொசுக்களால் பரவும் பிளேவி வைரஸ் மூலன் சிக்குன்குன்யா காய்ச்சலும், குயிலெக்ஸ் வகையைச் சேர்ந்த கொசுக்கள் மூலம் மூளைக் காய்ச்சல் உருவாகவும் வாய்ப்பு உண்டு.
இந்த நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவ கொசுக்களே முக்கிய காரணிகளாக இருக்கின்றன. கொசுவால் ஒருவருக்கு உடல் நலன் பாதிக்கப்படுகிறது என்றால், அந்த குடும்பத்தில் மற்றவருக்கும் அந்த நோய் பரவும் ஆபத்து உண்டு. மேலும், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலத்துக்கு உடல் நலன், மன பலம், குடும்ப பொருளாதாரம் ஆகியவற்றை இந்த நோய்கள் சிதைத்துவிடுகின்றன. ஆகவே, மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு வழி செய்யும் வகையில் கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.
பொதுவாக மலேரியாவை உருவாக்கும் கொசுக்கள் சாக்கடையிலும், டெங்கு உருவாக்கும் கொசுக்கள் நன்னீரிலும் வளர்கின்றன. சென்னை போன்று பரந்து விரிந்த மாபெரும் நகரத்தில் சொற்பமான எண்ணிக்கையில் இருக்கும் மாநகராட்சி ஊழியர்களால் மட்டும் நீர்நிலைகளை பாதுகாத்து கொசுக்களை முற்றிலுமாக கட்டுப்படுத்திவிட முடியாது என்பது மேயர் சைதை துரைசாமிக்குப் புரிந்தது.
அதனால் கொசு ஒழிப்பை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றினால்தான் தீர்வு கிடைக்கும் என்பதை அறிந்து, அதற்கான முயற்சிகள் மேற்கொண்டார். குடிமக்கள் அனைவரும் இணைந்து செயல்படும் வகையில், 2011 முதல் 2016 வரை கொசுக்களுக்கு எதிராக சைதை துரைசாமி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
- நாளை பார்க்கலாம்.