- ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர்.
ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்பும் மனிதர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு அவசியம். அதேநேரம் எல்லா வலிகளுக்கும் மருந்து அல்லது மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டியதும் இல்லை. இதற்கு தீர்வு காட்டுவதே பிசியோதெரபி சிகிச்சை.

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீடித்த முதுகுவலி, குதிகால் வலி, இடுப்பு வலி என்று வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. ஒவ்வொரு நபருக்கும் உடலில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையின் தீவிரத்தை அறிந்து, அதற்கேற்ப பல்வேறு வகையினில் சிகிச்சை அளிக்க முடிகிறது.
வலியை நீக்கும் மருத்துவம் என்று மட்டுமே பலரும் பிசியோதெரபி சிகிச்சையை நினைக்கிறார்கள். இதன் மூலம் நரம்பியல் பலவீனம், தசை பிடிப்பு, நடுக்கம், பக்கவாதம், முதுக்குத் தண்டு காயம், தோல் உணர்வு குறைதல், தசை நார் குறைகள், எலும்புகள், மூட்டுகள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு தருகிறது. அதோடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள், நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுப்பவர்கள், பிறவிக் குறைபாடுகள், உடல் வளர்ச்சியில் ஏற்படும் குறைகள் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.
குறிப்பாக முதியோர்களுக்கு ஏற்படும் கீல்வாதம், ஆஸ்டியோபோராசிஸ் போன்ற பிரச்னைகளை சமாளிக்கவும், சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை.
ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் வெப்ப சிகிச்சை, உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ், மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டப்படுகிறது. பொதுவாக பாதிக்கப்பட்டவரின் உடல் நிலையை நன்கு கவனித்து அவருடைய தினசரி நடவடிக்கைகளை ஆய்வு செய்தே சிகிச்சைக்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வகையில் சிறப்பு சிகிச்சை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுகிறது.
விபத்து, சிகிச்சைக்குப் பின் ஒருவர் சரியாக எழுந்து நடமாட பிசியோதெரபி உதவுகிறது. மூட்டுகளில் இருக்கும் மெல்லிய திசுக்களை அசைத்தல், உடலில் இருக்கும் நச்சை நீக்குதல், தசைகளை தளர்த்து ஓய்வெடுத்தல் மூலம் உடல் வலிமையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும் பிசியோதெரபி உதவுகிறது.
ஒவ்வொரு நபருக்கும் அவரவருக்கு ஏற்ற உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. பயிற்சிக்கு உடலை வளைக்கும்போது ஏற்படும் வலி, பாதிப்புகள் ஆகியவை நன்கு கவனிக்கப்பட்டு, அதற்கேற்ப பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. குளிர்ந்த அல்லது சூடான ஒத்தடம் கொடுக்கும் போது வலி, வீக்கம் போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைப்பதை ஒவ்வொரு நபரும் உணரமுடியும்.
ஒவ்வொரும் நபருக்கும் ஏற்பட்டிருக்கும் நோய் பாதிப்பு வித்தியாசமானது என்பதால் அவரவர் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை கொடுக்கப்படும் காலம் அதிகமாகவும், குறைவாகவும் இருப்பதுண்டு. பொதுவாக இரண்டு அல்லது மூன்று சிகிச்சை நாட்களுக்குப் பிறகே அவர்களுக்கு பெரிய வித்தியாசம் காண முடியும். அதோடு உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யத் தொடங்கிவிட்டால் மிக விரைவில் முழு நிவாரணம் அடைந்துவிடலாம். முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கூடுதல் நாட்கள் தேவைப்படும்.
நேரடிக் கண்காணிப்பில் ஒவ்வொரு சிகிச்சையும் செய்யப்பட்டு, பயிற்சி செய்வதற்கும் முறையான பயிற்சிகள் கொடுக்கப்படுவதால் இனி, வலியுடன் யாரும் அவஸ்தைப்பட வேண்டிய அவசியமே இல்லை.
தொடர்புக்கு : 9994944228