நிஜம் இது தான்.
தமிழ் நாட்டில் அஜித்துக்கு என்று ஒரு பெரிய மாஸ் இருக்கிறது. யாருடைய பின்புலமும் இல்லாமல் தானே முன்னேறி வந்தவர் என்ற வகையில் திரையுலகில் எல்லோராலும் மதிக்கப்படுபவர். அதோடு நடுத்தட்டு வர்க்கத்திலிருந்து வந்தவர்.
பொதுவாகவே நடிகர்கள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள பப்ளிசிட்டி தேடுவார்கள். அப்போதுதன் அடுத்த படத்துக்கு கூடுதலாக திரையரங்களில் மக்கள் கூடுவார்கள், சம்பளம் கூட்ட முடியும். ஆனால் அஜித் இதிலும் தனித்து விளங்குபவர். மீடியா வெளிச்சத்தை விரும்பாதவர். அதுமட்டுமின்றி அவருக்கென சோசியல் மீடியா கணக்குகள் இல்லை. தன்னை நேசிக்கும் ரசிகர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார் அஜித்.
மோட்டார் பைக் ரேஸில் ஆர்வம் காட்டிய அஜித் இப்போது கார் ரேஸ்க்கு மாறியிருக்கிறார். கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக அவர் தன் கைவசம் உள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களின் பணிகளையும் விறுவிறுவென முடித்துக் கொடுத்துவிட்டு சென்றார். அப்போது கார் பந்தயம் முடிந்த பின்னர் பட பணிகளை முடிக்கலாமே என விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி சொன்னபோது, ரேஸில் எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம், அதனால் படம் பாதித்துவிடக் கூடாது, அதன் காரணமாக படப்பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு செல்கிறேன் என்று தொழில் அக்கறையைக் காட்டியவர்.
இவருக்குப் போட்டியாளராக இருந்த விஜய் அரசியலில் நுழைந்ததைக் காரணமாக வைத்து, அந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று அஜித் ஆசைப்படவில்லை. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை கொடுத்ததற்காக அஜித்துக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்ம பூஷன் விருது வென்றுள்ள நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
இந்த நிலையில் அஜித்துக்கு கிடைத்த அவார்டுக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழவே செய்கிறது. அரசியல் வேண்டவே வேண்டாம் என்று அஜித் ஒதுங்கியிருக்கிறார் என்றாலும், அவருக்கு அரசியலில் மோசமான அனுபவங்கள் கிடைத்துள்ளன. ஆகவே, அவரை எப்படியாவது கொண்டுவரும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் இடத்தில் அஜித்தைப் பொருத்த நினைக்கும் எதிர்காலத் திட்டத்துக்காகவே இந்த விருது என்று சொல்லப்படுகிறது. இதனை அஜித்தும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அவருக்கு முன்னதாக கலைத்துறைக்கு வந்து, அவரை விட அதிக சினிமா சாதனைகள் புரிந்திருக்கும் விஜய்க்குக் கொடுக்காமல் அஜித்துக்குக் கொடுத்திருக்கும் பின்னணியில் நிச்சயம் அரசியல் இருக்கிறது. அது எப்போது வெளியே வரும் என்று வெயிட் பண்ணலாம்.