- புத்திசாலித்தனம் என்பது உலகின் எந்தப் பொருளாலும் உன் ஆசையை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து கொள்வதே
- மரணத்தை நினைவில் வைத்திருப்பவரை வாழ்க்கை ஏமாற்றாது
- அன்பு எந்த ரகசியத்தையும் தன்னுள் வைத்திருப்பதில்லை, அது அனைத்தையும் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறது.
- உலகிலேயே நம்பவே முடியாதது மனம் தான். இன்று ஒன்றை தேடும், நாளை மற்றொன்றை தேடும். காலையில் ஒன்றுக்கும் மாலையில் மற்றொன்றுக்கும் ஆசை கொள்ளும். கடந்த கணத்தில் என்ன உணர்ந்ததோ, அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றை இப்போது உணரும்.
- ஆணவம் என்பது காலம் முழுவதும் எதையாவது ஆசைப்பட்டு கொண்டே இருக்கும் பிச்சைக்காரன், அன்பென்பது தன்னிடம் உள்ள அனைத்தையும் வாரித் தரும் பேரரசன்.
- மனிதன் புரிந்து கொள்ள முடியாத வித்தியாசமான மிருகம், இறந்தவர்களைப் பற்றி பேசினால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறான், உயிரோடு இருப்பவர்களை கொலை செய்ய ஆசைப்படுகிறான்.
- அன்பு ஒரு ஒப்பந்தம் அல்ல. இலாப நஷ்ட கணக்கை அது பார்ப்பதில்லை. இந்த பொருளியல் பூமியில் பொருளியலை கடந்த ஒளிக்கதிர் தான் அன்பு. அதுதான் அதன் அழகு.
- நிகழ்காலத்தில் மிக அருகிலேயே மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால் அதை மறந்து கடந்த காலம், எதிர்காலம் என மாறி மாறி மகிழ்ச்சியை தேடுகிறீர்கள், அது அப்படி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை
- உலகில் மணமானவர்கள் எல்லோருக்குமே ஓர் எண்ணம் உண்டு. வேறொருவரை மணந்திருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என நம்புகின்றனர், ஆனால் ஜோடியை மாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் கூட 15 நாட்களில் அவர்களின் புதிய ஜோடியும் பழையது போலவே தோன்றும். இது எதிலும் நிறைவடையா மனதின் தன்மை.
- யாரும், யாருக்காகவும் படைக்கப்படவில்லை, ஒவ்வொருவரும் தனக்கென மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
- கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் பகிர்ந்தளித்தல் ஆகியவை சேர்ந்ததே வாழ்க்கை. எனவே கிடைத்த இந்த நொடியை கவலைப்படுவதற்கு பயன்படுத்தாமல் வாழ்வதற்கு பயன்படுத்துங்கள்.
- யாரோ போல வாழ வேண்டும், யாரோ போல சம்பாதிக்க வேண்டும், யாரோ போல மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்; ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே ஒரு தலைசிறந்த படைப்பு. உங்களை மேம்படுத்த தேவையில்லை, அதை உணருங்கள் போதும்.
- யாராவது உங்களை நேசித்தால், அவர்களிடம் நன்றியுடன் இருங்கள், அவர்களிடம் ஏதாவது எதிர்பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்.
- என் வாழ்க்கை கொண்டாட்டமானது, அதன் பின் விளைவுகளைப் பற்றி எனக்கு அக்கறையோ கவலையோ இல்லை, நான் கொண்டாடத் தான் இந்த பூமிக்கு வந்திருக்கிறேன். அப்படித்தான் வாழ்வேன்.
- மனிதன் மகிழ்ச்சியடையவும் கொண்டாடவும் தான் பூமிக்கு வந்திருக்கிறான், மகிழ்ச்சியை விட உயர்வானது என அவனிடம் வேறு எதுவுமே இல்லை.
- உலகில் மிக கவர்ச்சிகரமான விலை உயர்ந்த பொருட்களை கொடுத்தாலும் நீங்கள் நிறைவடைய போவதில்லை. மீண்டும் வேறு எதையாவது தேடுவீர்கள். அது உங்களுக்கு உள்ளேயே பொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறியாத வரை உங்களால் மகிழ்ச்சியாக வாழவே முடியாது
- புத்தர் மதத்தையோ, அறிவுரைகளையோ, சித்தாந்தங்களையோ தரவில்லை, அவை அடிமைத்தனத்தை உருவாக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தார், அவர் கொடுத்தது முழுமையான சுதந்திரம், யாராலும் உங்களிடமிருந்து பறிக்க முடியாத சுதந்திரம்