என்ன செய்தார் சைதை துரைசாமி – 375
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் மேயர் சைதை துரைசாமி. புரட்சித்தலைவரால், ‘அதிமுகவின் முதல் தியாகி’, ‘அதிமுகவின் பகத்சிங்’ என்றெல்லாம் அடையாளம் காட்டப்பட்டவர். ’சேவையின் பாதையில் பொதுவாழ்க்கையை அமைத்துக்கொள்’ என்று புரட்சித்தலைவர் காட்டிய வழியில் இன்று வரை வாழ்ந்துவருகிறார்.
அதிமுகவை இரும்புக்கோட்டையாக மாற்றியவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. அதேபோல் புரட்சித்தலைவர் கொடுத்த வாக்கை காப்பாற்றுவது போன்று சென்னையின் முதல் அதிமுக மேயர் என்ற வாய்ப்பு கொடுத்தவர் என்பதால் புரட்சித்தலைவி மீதும் சைதை துரைசாமிக்கு அளவுக்கதிக மதிப்பும் மரியாதையும் உண்டு.
இந்த இருவரையும் தவிர, வேறு ஒரு தலைவர் மீது சைதை துரைசாமிக்கு அதிகபட்ச மதிப்பு இருக்கிறது என்றால், அவர் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி. மக்கள் சேவைக்கு தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர் என்பதாலும் இரவும் பகலுமாக நாட்டுக்கு உழைப்பவர் என்பதாலும் வேறு கட்சியைச் சேர்ந்தவர் என்ற பாகுபாடு பார்க்காமல் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்.
பெருநகர சென்னையின் மேயராக சைதை துரைசாமி இருந்த காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கும் அவர் முன்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இதை தன்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் என்று கருதுகிறார் மேயர் சைதை துரைசாமி.
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் 2015ம் ஆண்டு நடந்தேறியது.
- நாளை பார்க்கலாம்.