என்ன செய்தார் சைதை துரைசாமி – 276
தன்னுடைய மேயர் பதவி காலத்தில் மக்களுக்கு முழு நேரமும் சேவை செய்ய வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியுடன் இருந்தார். அதனால் அரசு வேலைக்குச் செல்லும் ஊழியர் போன்று காலையில் சாப்பாடு எடுத்துக்கொண்டு தினமும் மேயர் அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
பொதுவாக எந்த மேயரும் தினமும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருவதில்லை. பகுதிநேரமாக வந்து செல்வதே வழக்கம். ஆனால், இவர்களிடமிருந்து வித்தியாசமான மேயராக சைதை துரைசாமி இருந்தார். அதிகாரிகள் நீட்டும் கோப்புகளில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடாமல், முழுமையாகப் படித்து, அதனை ஆய்வு செய்து, தேவையான திருத்தங்கள் செய்து, அதன்பிறகே கையெழுத்து போடுவார்.
இப்படி தன்னுடைய முழு நேரத்தையும் மக்களுக்குச் செலவிட மேயர் சைதை துரைசாமி தயாராக இருந்த காரணத்தாலே ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்க முடிந்தது. அதேபோன்று குத்தகையில் இருந்த முறைகேடுகளைத் தவிர்க்கவும், நிலுவைத் தொகையை வசூலிக்கவும் நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து அவரது பார்வை சென்னை மாநகராட்சியின் வணிக வளாகங்கள் பக்கம் திரும்பியது. சென்னை மாநகராட்சியில் நூற்றுக்கும் மேறட்ட வணிக வளாகங்களும் அவற்றில் 5,800க்கும் மேற்பட்ட கடைகளும் இருந்தாலும், வாடகை வசூலிப்பது பெரும் பிரச்னையாக இருப்பது தெரியவந்தது. இங்கு கடைகள் 9 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை நீட்டிப்பு என்று அரசாணை இருந்ததாலே இத்தனை குளறுபடி என்பதை அறிந்தார்.
இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு மட்டுமே கடைகள் வாடகைக்கு விடப்படும் என்ற திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்று வாடகை நிலுவைத் தொகை செலுத்தாத வணிக வளாகங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உடனடியாக சீல் வைக்கப்பட்டன. இப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியாமல் அசட்டையாக இருந்தவர்கள், அதன்பிறகு அலறியடித்துக்கொண்டு வாடகை கட்டினார்கள். மாநகராட்சி கடையை ஒரு முறை வாடகைக்கு எடுத்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் சொந்தம் கொண்டாடலாம் என்ற எண்ணத்தை மாற்றியவர் மேயர் சைதை துரைசாமி தான்.
- நாளை பார்க்கலாம்.