• Home
  • சட்டம்
  • பட்டா இல்லை, பத்திரம் மட்டும் போதுமா..?

பட்டா இல்லை, பத்திரம் மட்டும் போதுமா..?

Image

சட்டத்தில் சந்தேகம் தீர்க்கிறார் வழக்கறிஞர் நிலா

சமீபத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பத்திரம் மட்டும் போதும் என்று சிலர் கருதுகிறார்கள். பத்திரம் போதும் என்பது உண்மை என்றாலும் பட்டாவும் முக்கியம். அப்போதுதான் ஒரு சொத்தை சிக்கலின்றி விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் முடியும். இப்போது பட்டா இல்லாதவர்களுக்கு தமிழக அரசு சிறப்புத் திட்டம் அறிவித்து பட்டா கொடுக்கிறார்கள். ஆகவே, வாங்காதவர்கள் இப்போதே வாங்கிவிடுங்கள்.

சொத்து ஆவணங்கள் எல்லாமே ஆன்லைனுக்கு மாறிவருகிறது என்பது உண்மை. இந்த ஆவணங்களை யாரும் திருத்தவோ மாற்றவோ முடியாது. ஆனால், இவை எல்லாமே சமீபத்திய ஆண்டுகளில் பதியப்படும் சொத்துக்களுக்கு மட்டுமே சரியாக இருக்கும். பழைய சொத்துக்களுக்கு பட்டா முக்கியம்.

நிறைய பேருக்கு பட்டா என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள். அதனால் தான் பத்திரம் ஒருவர் பெயரில் பட்டா வேறு ஒருவர் பெயரில் இருக்கிறது. பத்திரம் பதிந்து சொத்து வாங்கியவர்கள், பட்டாவை தங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும். பத்திரம் என்பது பதிவுத்துறை ஆவணம் என்பது போன்று பட்டா வருவாய்த்துறை ஆவணம்.

பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், விரித்தொகை எவ்வளவு, இடத்தின் விஸ்திரம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தையின் பெயர் ஆகியவை அடங்கியிருக்கும். பத்திரம் மட்டும் இருக்கும் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தினால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பட்டா இருக்கின்ற நிலம் சட்டபூர்வமான நிலம் ஆகும் அதை அரசாங்கம் கையகப்படுத்தினாலும் அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அதனால் நிலம் இருக்கிறது என்றால் அதற்கு பட்டா, பத்திரப்பதிவு என இரண்டுமே முக்கியம். வங்கியில் கடன் வாங்க நினைக்கும் நேரத்திலும், நீதிமன்றத்துக்கு வழக்கு வரும் நேரத்திலும் பட்டாவின் அவசியம் தெரியவரும்.

எனவே, எப்போதும் இரண்டையும் சேர்த்தே வைத்திருங்கள்.

Leave a Comment