எடப்பாடி அமைதிக்கு காரணம் என்ன?
அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியே விட்டதன் காரணமாக ஒரே நாளில் இந்தியா முழுக்க வைரல் ஆன நிர்மலா சீதாராமன், மேலும் சில பொய்களைச் சொல்லி தமிழக மக்களை அலற விட்டுள்ளார். அதேநேரம், அவருக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொடுப்பது அ.தி.மு.க.வினரையே அதிர வைத்துள்ளது.
கோவைக்கு வர இருந்த ₹ 6000 கோடி செமி கண்டக்டர் தொழிலை குஜராத்துக்கு மாற்றியது பா.ஜ.க. அரசு இது குறித்து கேள்வி எழுப்பிய இளைஞரை மிரட்டி அனுப்பினார் நிர்மலா சீதாராமன்.
அதேபோல், ‘தமிழகத்தில் 5.6 கோடி பேருக்கு முத்ரா லோன் கொடுக்கப்பட்டுள்ளது கோவை மக்களுக்கு மட்டும் 20 லட்சம் பேருக்கு முத்ரா லோன் வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறி மோடியை விட மிகப்பெரிய வடையை சுட்டிருக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழகத்தின் மக்கள் தொகை 8 கோடி பேர் தான். இங்கு 2.25 கோடி ரேசன் கார்டு மட்டுமே இருக்கின்றன. இந்த நிலையில் எப்படி 5.6 கோடி பேருக்கு முத்ரா லோன் வழங்கியிருக்க முடியும். ஒட்டுமொத்த கோவை மக்களின் ஜனத்தொகை 30 லட்சம் பேர் மட்டுமே இருக்கும்போது எப்படி 20 லட்சம் முத்ரா லோன் வழங்கியிருக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
இத்தனை அடாவடி செய்யும் ஆணவமாகப் பேசும் நிர்மலா சீதாராமனுகு எதிராக எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதைவிட ஆச்சர்யமாக அ.தி.மு.க.வின் ஐ.டி. விங் ஆட்கள் அன்னபூர்ணா சீனிவாசனை கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். கோவையைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் கொங்கு வேளாளர் இல்லை என்பதாலே அமைதியாக இருக்கிறாராம்.
அ.தி.மு.க.வினர் இது குறித்து, ‘’அதே கிச்சன்.. அதே தோசைக்கல்லு, அதே மாஸ்டர், அதே தோசை மாவு.. ஆனால் வெளியிலே உக்காந்து சாப்பிட்டா ஒரு விலை.. ஏ.சி. ரூமிலே உக்காந்து சாப்பிட்டா கூடுதல் விலை. கேட்டால் ஏ.சி. கரண்ட் செலவுன்னுறீங்க. ஒவ்வொரு தோசைக்கும் தனித்தனியா கரண்டு பில்லு கட்டுறீங்களாய்யா?
அது சரி.. உங்க ஹோட்டலிலே உக்காந்து சாப்பிட்டா ஒரு காசு. அதே பார்சல் வாங்கினால் கூடுதல் விலை. ஏன்? ஹோட்டலிலேயே உக்காந்து சாப்பிடும் போது வரும் ஃபேன், லைட் உள்ளிட்ட செலவு பார்சல் வாங்கிட்டு போனால் இல்லை. குடிநீர் செலவு இல்லை. தட்டு, இலை போட்டு அதைக் கழுவும் செலவு இல்லை. ஆனால் பார்சலுக்கு இலைக்கும், பேப்பருக்கும் தனியா கூடுதல் கட்டணம் என்ன நியாயம்? ஸ்விகி, ஸொமோட்டோவிலே வாங்கினா கூடுதல் விலை. ஏன்னு கேட்டால் அவனுங்களுக்கு கமிஷன் கொடுக்கணும். சரி. அப்போ நான் நேரிலே வந்து வாங்கினால்? உன் ஹோட்டலிலே வந்து சாப்பிடுறதை விட கம்மியாத்தானேய்யா கொடுக்கணும்?’’ என்றெல்லாம் கிண்டல் செய்கிறார்கள்.
அப்படி என்றால் பா.ஜ.க. எதிர்ப்பு என்பதெல்லாம் போலியா எடப்பாடி..?