• Home
  • அரசியல்
  • காங்கிரஸை காப்பியடித்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்

காங்கிரஸை காப்பியடித்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்

Image

ஆந்திரா, பீகாருக்கு ஜாக்பாட்

இன்று பட்ஜெட் தாக்கல் செய்திருக்கும் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் காப்பியடித்து இளைஞர்களுக்கு இண்டர்ன்ஷிப் அறிமுகம் செய்திருக்கிறார். இது காங்கிரஸ் திட்டம் என்றாலும் காப்பியடித்து செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது என்று ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

இன்றைய பட்ஜெட் தாக்கலில் வருமான வரி வரம்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி திட்டம் அறிவிப்பின்படி 3 லட்சம் வரை வரி கிடையாது மூன்று லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை வருமானத்திற்கு 5 சதவிகித வரி 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10% வரி 10லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவிகிதம் வரி 12 இலிருந்து 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரி 15 லட்சத்திற்கும் மேலிருந்தால் 30 சதவிகிதம் வரி அறிவிப்பு

அதேநேரம் பீகார், ஆந்திராவுக்கு ஜாக்பாட்டாக அள்ளிக் கொடுத்திருக்கும் பா.ஜ.க. தமிழகத்துக்கு வழக்கம் போல் ஏமாற்றம் அளித்திருக்கிறது. மத்திய அரசின் பட்ஜெட்டில் பீகாருக்கு மட்டும் சுமார் 1 லட்சம் கோடிக்கு சலுகைகள் மற்றும் ஒதுக்கீடு. இரண்டாம் இடத்தில் ஆந்திரப் பிரதேசம் உள்ளது.

கூட்டணி வைத்ததற்கான நன்றிக்கடனுக்காகவும் வரவிருக்கிற சட்டமன்ற தேர்தலுக்காகவும் பீகாரை தாங்கி பிடிக்கிற பாஜக அரசு தமிழகத்தை சகல விதங்களிலும் புறக்கணித்துள்ளது. மாற்றான் தாய் மனப்பான்மையோடு தமிழகத்திற்கும், தேர்தலை மனதில்கொண்டு பீகாருக்கும் நிதி ஒதுக்குகிற இந்த நடைமுறை எதிர்கால இந்தியாவுக்கு சரியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதோடு 11,500 கோடி ரூபாய் பீகார் மாநிலத்திற்கான பேரிடர் நிவாரணமாக அறிவிப்பு பேரிடர் தடுப்பு பணிகளுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது பீகார் மாநிலம் அதிக அளவில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுகிறது முக்கியமாக அண்டை நாடுகளின் இயற்கை பேரிடர்கள் பீகார் மாநிலத்தை அதிகம் பாதிக்கிறது என நிதியமைச்சர் பேசியிருக்கிறார்.

பீகாரில் உள்ள புராதானமான கோயில்களை மேம்படுத்துவதற்கான சிறப்பு நிதி அறிவிப்பு நாளந்தா பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டிற்கும் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கும் என்று கூடுதல் நிதி அறிவிப்பு ஒடிசா மாநிலத்திற்கான கோவில்கள் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மேம்பாட்டிற்கும் கூடுதல் நிதி அறிவிப்பு செய்திருக்கிறார்.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் NDA கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு. பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதியுதவி அறிவிப்பு ஆந்திராவிற்கு 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்குப் புதிய இன்டெர்ன்ஷிப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலமாக ஒரு கோடி இளைஞர்கள் பலன் பெறுவார்கள் என அறிவிப்பு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் மூலமாக பயிற்சிகள் வழங்கப்படும் இதன் மூலமாக சுமார் 500 துறைகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் மாநிலம் மற்றும் தொழில்துறையினருடன் இணைந்து திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment