குப்பை தொட்டிக்குப் புதிய தீர்வு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 291

சென்னை மாநகரில் மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்றுக் கொண்டதும் குப்பைகளை முறையாக அகற்றி, சென்னையை சுத்தமாக மாற்றுவதற்கு ஏராளமான ஆய்வுகள் மேற்கொண்டார். அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடினார். அதோடு நிறைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்வதற்கும் தயாராக இருந்தார்.

தங்கள் வீட்டுக் குப்பையைக் கொட்டுவதற்கே மூக்கைப் பொத்திக்கொண்டு குப்பைத் தொட்டிக்கு அருகில் செல்கிறார்கள். அங்கே போன பிறகும், குப்பைத் தொட்டிக்குள் போடாமல் தொட்டிக்குக் கீழே போட்டுவிட்டு வருகிறார்கள். இதனால் குப்பை சிந்தியும் சிதறியும் கிடக்கிறது. நாய், மாடு, ஆடு போன்றவை இந்த குப்பைகளைக் கிண்டி ரோடு முழுவதும் அசுத்தமாக்கி விடுகின்றன. அதோடு குப்பைத் தொட்டி கீழே விழுந்தும் குப்பைகள் சிதறுவது உண்டு. ஒரு சிலர் குப்பைத் தொட்டியை தங்கள் வீட்டுப் பகுதியில் இருந்து வேறு பகுதிக்குத் தள்ளி வைக்கும் அவலமும் நடந்தது.  

இந்த சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் வகையில் குப்பைத் தொட்டியை சரியான இடத்தில் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். நடைபாதைக்கு எந்த இடையூறும் இல்லாமல் குப்பைத் தொட்டி நிறுத்துவதற்கு, ‘ப’ வடிவ மேடைத் தடுப்பு அமைக்கப்பட்டு, அதில் குப்பைத் தொட்டியை நிறுத்துவதற்குத் திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி.

இந்த ‘ப’ வடிவ குப்பை மேடை முதலில் பேருந்து சாலைகளிலும், அதனைத் தொடர்ந்து உட்புறச் சாலைகளிலும் நடைமுறைக்கு வந்தது. இந்த ’ப’ வடிவ மேடை சாலைக்கு உள்ளடங்கி ஏற்படுத்தப்படும் வகையில் திட்டமிடப்பட்டது. இதனால் குப்பைத் தொட்டியால் ஏற்படும் சின்னச்சின்ன சிக்கல்களுக்கு விடிவு கிடைக்கும் என்று மேயர் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார். இப்படி ஒரு முயற்சி அல்லது நடவடிக்கை மாநகராட்சிக்குப் புதிது. மேயர் சைதை துரைசாமி தவிர வேறு யாராலும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுமா என்பதே சந்தேகம் தான்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment