புதிய வாகன நிறுத்தங்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி  259

பெருநகர சென்னையில் வீட்டுக்கு ஒரு டூவீலர் என்று இருந்த நிலைமை மாறி, வீட்டுக்கு ஒரு கார் எனும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. வாடகை வீட்டில் இருப்பவர்களும் கார் வாங்கி பயணிக்கிறார்கள். வேலை நிமித்தம் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு டூவீலரை விட கார் அதிக பயன் தரக்கூடியது என்பதாலும் நிறைய பேர் கார் வாங்குகிறார்கள். இந்த விஞ்ஞான மாற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது என்பது மேயர் சைதை துரைசாமிக்கு நன்கு தெரியும்.

அதேநேரம், இந்த வாகனப் பெருக்கம் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் சென்னையில் உருவானது. அதை விட, வாகனத்தை நிறுத்த இடமின்றி மக்கள் தவிப்பதும் அதிகரித்துவிட்டது. ஏனென்றால், அந்தக் காலத்தில் இத்தனை கார்கள் வரும் என்பதை கணித்து சாலைகள் போடப்படவில்லை. அதனால், வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில் அதற்கேற்ப  வாகனத்தை நிறுத்தம் உருவாக்குவது சவாலாக இருந்தது.

இதற்கு தீர்வு காணவேண்டிய அவசியமும் மேயர் சைதை துரைசாமிக்கு இருந்தது. ஏனென்றால் இந்த வாகன நெரிசலில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள், காவலர்களின் ரோந்து வண்டிகளும் சிக்கிக்கொள்ளும் சூழல் நிலவியது. இதையடுத்து இந்த நெரிசலுக்கு நீண்டகாலத் தீர்வு வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் மேயர் சைதை துரைசாமி.

இதற்காக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனைகள் மேற்கொண்டார். எத்தனை நெரிசலான சாலை என்றாலும் அதன் அருகில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார். வெளிநாடுகளிலும், மிகப்பெரிய மால்களிலும் இருக்கும் வகையில் சென்னை மாநகர் முழுக்க அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கலாம் என்று முடிவுக்கு வந்தார் மேயர் சைதை துரைசாமி.

வழக்கம் போலவே, அடுக்குமாடி வாகன நிறுத்தம் சென்னைக்கு சரிப்பட்டு வராது என்று அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment