கைவிடப்பட்ட புதிய குப்பை வளாகங்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 301

பெருநகர சென்னையின் குப்பை மேலாண்மைக்கு நான்கு இடங்கள் அவசியம் என்பதற்காகவே புதிய இடங்களைத் தேடினார் மேயர் சைதை துரைசாமி. சென்னை பெருநகரம் முழுக்க சல்லடை போட்டுத் தேடியே திருவள்ளூர் மாவட்டம் கூத்தம்பாக்கம் மற்றும் மீஞ்சூர் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இந்த பகுதியில் புதிதாக அமைக்கப்படும் குப்பை கொட்டும் வளாகம் நவீன முறையில் ஒரு தொழிற்சாலை போன்று அமையவேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். அதாவது இங்கு குப்பைகள் எல்லாமே பங்கர் முறையில் சேகரிக்கப்படும் என்பதால், குப்பைகள் கொட்டப்படுவதே வெளியே தெரியாது. அதேநேரத்தில் குப்பைகளைப் பிரித்து மின்சாரம், எரிவாயு, உரம் போன்றவை தயாரிக்கப்படும். கிட்டத்தட்ட ஒரு சுற்றுச்சூழல் தொழிற்சாலையாகவே குப்பை வளாகத்தை உருவாக்க ஆசைப்பட்டார்.

ஆனால், கூத்தம்பாக்கம் மற்றும் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் குப்பை வளாகத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் தன்னுடைய கனவுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேயர் சைதை துரைசாமி மீது மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தாலும், மாநகராட்சி செயல்பாடுகள் அவரையும் மீறி நடக்கும் என்று அச்சப்பட்டார்கள். மேலும், இந்த குப்பை கொட்டும் வளாகம் காரணமாக தங்கள் பகுதியின் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்தார்கள்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவதே ஜனநாயகம். எனவே, அந்த பகுதி மக்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். எந்த ஒரு திட்டத்தையும் வலிந்து திணிப்பது தேவையில்லை என்பதால், புதிய குப்பை வளாகம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைக் கைவிட்டார். தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் மேயர் சைதை துரைசாமி விரைந்து செயல்பட்டார். அதனால், தேவையின்றி போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற எந்த பிரச்னையும் இல்லாமல் இந்த விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

மாநகராட்சி நலனை விட, அந்த பகுதி மக்களின் விருப்பத்துக்கு முன்னுரிமை கொடுத்த காரணத்தாலே அந்த பகுதி மக்களால் இன்றும் கொண்டாடப்படுகிறார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment