என்ன அறிகுறி தெரியுமா?
பொதுவாக எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சமயம் உடலில் அரிப்பு ஏற்படுவதுண்டு. எனவே, இது ஒரு சாதாரண தோல் பிரச்னையாகவே அறியப்படுகிறது. அழுக்கு ஆடை, அதிக வியர்வை, கிருமித் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் அரிப்பு ஏற்படுகிறது.
ஆனால், நீரிழிவு நோயின் பக்கவிளைவாக உள்ளங்காலில் ஊசிக்குத்தலும் அரிப்பும் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இரவு நேரத்தில் விழிப்பு வரும் அளவுக்கு ஊசிக்குத்தலும் அரிப்பும் தோன்றுகிறது. இதனை சமாளிக்க முடியாமல் அரிக்கும் இடத்தில் சொறிந்து சொறிந்து புதிய பிரச்னையை நீரிழிவு நோயாளிகள் உருவாக்கி விடுகிறார்கள்.
பொதுவாக சர்க்கரை நோயாளிகளின் பாதங்களில் அரிப்பு அதிகமாக இருக்கும். இதற்கு முக்கியமான காரணம் நரம்புகள் மற்றும் ரத்தவோட்டம் ஆகும். அதாவது நரம்புகள் சேதமடையும் போதும், ரத்த ஓட்டம் மோசமாகும் நேரத்திலும் அரிப்பு உருவாகிறது.
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் 109 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 36 சதவீதம் பேருக்கு அரிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளில், சிறுநீரகங்கள் அதிகப்படியான சர்க்கரையை வடிகட்டி உறிஞ்சுவதற்கு அதிக நேரம் வேலை செய்கின்றன. அவற்றைத் தக்கவைக்க முடியாதபோது, அதிகப்படியான சர்க்கரை சிறுநீரில் சென்று உடலின் திசுக்களில் இருந்து திரவங்களை எடுத்துக்கொள்கிறது. இதனால் நீரிழப்பு ஏற்படுகிறது. இதுவே, வறண்ட சருமத்திற்கும் வழிவகுப்பதால் ஊசிக்குத்தல் ஏற்படுகிறது.
இதற்கு நீண்ட நேரம் நடப்பது ஒரு நல்ல தீர்வாக அறியப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த அழுத்த பிரச்னையும் இருக்கும்போது அரிப்பு அதிகம் ஏற்படுகிறது. அதாவது குறைக்கப்பட்ட ரத்தவோட்டம் தோலில் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இழந்து, இறுதியில் அரிப்பு ஏற்படுகிறது. நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதால் சருமத்தில் தொற்று மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கும். எனவே, ஜாக்கிரதையா பாத்துக்கோங்க.